பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


“அஞ்சாதே என்று எனக்கு ஆறுதல் கூறுவீராயின் நான் உயிர் பிழைப்பேன். அவ்வாறு உயிரி பிழைக்கச் செய்வது உங்களுக்குத் தகாத செயலோ?”

மஞ்சே – மேகங்களே; பொழிலே – சோலைகளே; வனதேவதை காள் – வனத்திலே உள்ள தெய்வங்களே; செம்சேவகனார் நிலை – சிறந்த வீரராகிய இராமபிரான் எனை இழந்ததால் அடையக்கூடிய நிலையை; நீர் – நீங்கள்; தெரிவீர் – அறிவீர்கள்; உரையீர் – அவருக்குச் சொல்வீராக; அஞ்சேல் என – அஞ்சுதல் வேண்டாம் என்று; நல்குதிரேல் – எனக்கு ஆறுதல்மொழி கூறுவீராயின்; அடியேன் – நான்; உஞ்சால் – (உய்வேன்) அவ்வாறு உயிர் பிழைத்தால்; அது தான் இழிவோ – உங்களுக்குத் தகாத இழிசெயலோ.

“கோதாவரியே! குளிர்வாய்
        குழைவாய்;
மாதா அணையாய்
        மனனே தெளிவாய்;
ஒதாது உணர்வார்
        உழை ஓடினை போய்
நீ தான் வினையேன்
        நிலை சொல்லலையோ?”

“கோதாவரியே! குளிர்ச்சி பொருந்தியவளே! தாய் போன்றவளே! தெளிந்த மனமுடையாய்! ஓதாது உணர்ந்த உத்தமன் இராமனிடம் ஓடிச்சென்று எனது நிலை சொல்வாயோ?”