127
கூறினான். தேரை நிறுத்துமாறு சொன்னான். நிறுத்தினான் அல்லன் அரக்கன்.
“அறிவில்லாதவனே! பிழை செய்து விட்டாய்; பேர் உலகின் மாதா அனையாளை யார் என்று நீ எண்ணினாய்?”
“சினங்கொண்டு கொல்ல வந்த யானை மீது மண் உண்டையை வீசலாமா? அது மேலும் சினம் கொண்டு தாக்குமன்றோ!”
“அது போல அரக்கர்களைக் கொன்று அறம் காக்க வந்த இராமபிரானது தேவியை அபகரித்துச் செல்லும் நின் செயல் மேலும் உங்கள் மீது பெரும் சீற்றம் கொள்ளத் தூண்டுமன்றோ!”
“மனிதர் வடிவில் வந்துள்ள இந்த இராம லட்சுமணர், பிரமன், விஷ்ணு, சிவன் எனும் மூவர்களின் ஆதி பரம் பொருளேயன்றோ! ஆலோசனை யற்றவனே! பயித்தியம் முற்றியவனாக நீ இந்த அபசாரம் செய்தாய்.
“திரிபுரம் எரித்த சிவபெருமானிடம் நீ பெற்ற வரங்களும், நீ தேர்ச்சி பெற்றுள்ள மாயப்போர் முதலிய விந்தைகளும் எதுவரை உனக்கு உதவும்?
இராமனது வில் உன் மீது கணை தொடுக்கும் வரை தான் பின்னர் அவை உன்னைப் பாதுகாக்க மாட்டா.
இராமன் உன் மீது போர் தொடுத்து விட்டால் அவனைத் தடுத்தல் அரிது. ஆதலின் இந்தச் சீதையை இங்கேயே விட்டு நீ ஓடிவிடு.
சீதா தேவியை அவள் இருந்த பன்ன சாலைக்கு நானே கொண்டுசேர்ப்பேன்;”
இவ்வாறு சமாதான முறையில் நல்லுரை கூறினான் சடாயு.
இராவணன் இணங்கினான் அல்லன்.