பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


இராவணனது தேர், குதிரை, பாகன் முதலியவற்றையெல்லாம் சடாயு அழித்து விட்டான். வேறு தேர் இல்லை இராவணனுக்கு. சீதா தேவியின் தனிமை கண்டான். சடாயுவின் மரணாவஸ்தை கண்டான். சீதையை அவளிருந்த நிலத்தோடு பெயர்த்துத் தன் தேர் மீது வைத்திருந்தான் அல்லவா? அந்த நிலத்தோடு அவளைத் தன் பருத்த தோள்களில் தூக்கிக்கொண்டான். வான வீதி வழியாகச் சென்றான்.


ஏங்குவாள் தனிமையும் - இவ்வாறு வருந்திப் புலம்புகின்ற சீதாபிராட்டியின் துணையற்ற தனி நிலைமையையும்; இறகு இழந்தவன் - சிறகிழந்த சடாயு; ஆங்கு - அப்போது; உறு தன்மையும் - உயிர் ஊசலாடுற்ற தன்மையையும்; அரக்கன் - இராவணன்; நோக்கினான் - பார்த்தான்; தேரிடை . தேர் மீது; வைத்த மண்ணோடும் - சீதையை வைத்த நிலத்தோடு; வாங்கினன் - தூக்கி எடுத்து; வீங்கு தோள் கொடு - பருத்து உயர்ந்த தனது தோள்களின் மீது வைத்துக்கொண்டு; விண்ணின் ஏகினான் - ஆகாய மார்க்கமாகச் சென்றான்.

வஞ்சியை அரக்கனும்
       வல்லை கொண்டு போய்ச்
செஞ்செவே திருவுருத்
       தீண்ட அஞ்சுவான்
நஞ்சு இயல் அரக்கியர்
       நடுவண் ஆயிடைச்
சிஞ்சுப வனத்திடைச்
       சிறை வைத்தா அரோ.

9