பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14



தா இல் மா மணிக் கலன்
        முற்றும் தனித்தனி சிதறி
நாவி நன்குழல் நானிலம்
        தை வரப் பரப்பிக்
காவி உண் கண்கள்
        அஞ்சனம் கான்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு
        எனப் புவிமிசைப் புரண்டாள்.

இரத்தினம் பதித்த அணிகள் யாவும் நாலா பக்கமும் சிதறிக்கிடந்தன. கஸ்தூரி வாசனை வீசும் தனது கூந்தலை அவிழ்த்தாள்; தலைவிரி கோலமானாள்; அழுதாள்; அதனால் கண்களில் தீட்டப்பட்ட மை கலங்கியது; கரைந்து ஓடியது. மலர் உதிர்த்த பூங்கொம்பு போல பூமியிலே கிடந்தாள் கைகேயி.

தா இல் மா மணிக்கலன்-குற்றமற்ற பெரிய இரத்தின மயமான நகைகள்; முற்றும்-முழுவதும்; தனித்தனி சிதறி— தனித்தனியாகச் சிதறி; நாவி நன்குழல்– கஸ்தூரி அணிந்த கூந்தலை, நானிலம் தை வரப் பரப்பி– பூமியிலே கிடந்து புரளும்படி அவிழ்த்து விட்டு; காவி உண் கண்கள்– நீலோத்பலம் போன்ற மையுண்ட கண்கள்; அஞ்சனம் கான்றிட- மை கரைந்து ஓட; கலுழா– அழுது கொண்டு; பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என- மலர் உதிர்த்த கொடி போல; புவி மிசைப் புரண்டாள்– தரையிலே புரண்டாள்.

நவ்வி வீழ்ந்தென நாடக
        மயில் துயின்றென்னக்
கவ்வை கூர்தரச் சனகியாம்
        கடி கமழ் கமலத்து