பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



பூதலம் உற்று அதனில்
        புரண்ட மன்னன்
மாதுயரத்தினை யாவர்
        சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட வெந்து
        வெந்து கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன
        வெய்து உயிர்த்தான்.

தரையிலே விழுந்து புரண்டு கொண்டிருக்கும் அத்தசரதனின் பெருந் துயரத்தினை எவரே சொல்லவல்லார்? யாரும் இலர். மனவேதனை பெருகப் பெருக உளம் மேலும் மேலும் வேதனையடைகிறது. கொல்லன் உலைக்களத்திலே ‘புஸ் புஸ்’ என்ற சப்தத்துடன் எரியும் தழல் போல் ‘புஸ்’ என்ற பெருமூச்சு விட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்.

பூதலம் உற்று–தரையிலே விழுந்து; அதனில் புரண்ட– அதிலே புரண்டு கொண்டிருந்த; மன்னன்– தசரத மன்னனின்; மா துயரத்தினை– பெரும் துன்பத்தை; யாவர் சொல்ல வல்லார்– சொல்ல வல்லவர் எவர்? (ஒருவரும் இல்லை) வேதனை முற்றிட– துன்பம் அதிகரிக்க; வெந்து வெந்து– மனம் வெதும்பி வெதும்பி; கொல்லன் ஊதுலையில்– கொல்லனுடைய உலைக்களத்திலே எழுகின்ற; கனல் என– நெருப்புப் போல; வெய் துயிர்த்தான்– பெருமூச்சு விட்டான்.

கையொடு கையைப்
        புடைக்கும்; வாய் கடிக்கும்
‘மெய்யுரை குற்றம்’ எனப்
        புழுங்கி விம்மும்;