பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


‘ஆழி சூழ் உலகம் எல்லாம்
        பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்
        தாங்க அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெம் கானம் நண்ணிப்
        புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டில் வா’ என்று
        இயம்பினன் அரசன் என்றாள்.

“கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் பரதனே ஆள, நீ நீண்ட சடாமுடி தரித்து அரிய தவம் மேற்கொண்டு காடு சென்று, புண்ணிய நதிகளில் நீராடி வா. ஓராண்டினில் அல்ல, ஈராண்டுகளில் அல்ல, பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வா. இது மன்னவன் இட்ட கட்டளை.”

இராமனை அழைத்து வரச் செய்து இவ்வாறு கூறினாள் கைகேயி.

ஆழி சூழ் உலகம் எல்லாம்– கடல் சூழ்ந்த இவ்வுலகம் அனைத்தையும்; பரதனே ஆள– பரதனே ஆண்டு கொண்டிருக்க; நீ போய்– நீ போய்; தாழ இரும் சடைகள் தாங்கி– தொங்குகின்ற பெருஞ்சடை தரித்து; தாங்க அரும்– தாங்குதற்கு அரிய; தவம் மேற்கொண்டு– தவத்தை மேற்கொண்டு; பூமி வெங்கானம்–புழுதியடைந்த வெப்பம் மிகுந்த காட்டை; நண்ணி– அடைந்து; புண்ணியத் துறைகள் ஆடி– புண்ணிய நதிகளில் நீராடி; ஏழு இரண்டு ஆண்டில்– பதினான்கு ஆண்டுகள் சென்றபின்; வா– திரும்பி வா; என்று இயம்பினன் அரசன் என்றாள்.

மன்னவன் பணியன்றாகில்
        நும் பணி மறுப்பனோ? என்