பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25



எண் நாட்டவர் யாவரும்
        நிற்க ஓர் மூவர் ஆகி
மண் நாட்டுநர் காட்டுநர்
        வீட்டுநர் வந்தபோதும்
பெண் நாட்டம் ஒட்டேன் இனிப்
        பேருலகத்துள் என்னா

“கைகேயிக்கு ஆதரவாக தேவரே வந்தாலும் சரி; மானுடரே வந்தாலும் சரி; நாகர் வந்தாலும் சரி; வித்தியாதரர் வந்தாலும் சரி; படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் செய்யும் அந்த மும்மூர்த்திகளே வந்தாலும் சரி, இனி இந்தப் பெண்மணியின் சதி நிறைவேற விடமாட்டேன்!” என்று முழங்கினான்.

(பின்னும் இலக்குமணன்) விண் நாட்டவர்– தேவரும்; மண்ணவர்; பூமியில் உள்ளவரும்; விஞ்சையர்– வித்யாதரரும்; நாகர்– பாதாள உலகத்தவரும்; மற்றும் எண் நாட்டவரும்– இன்னும் எண்ணத்தக்க பலவாகிய நாட்டில் உள்ளவர்; யாவரும்– எல்லோரும்; நிற்க– வந்து நிற்கட்டும்; மண் நாட்டுநர்– உலகை படைப்பவரும்; காட்டுநர்– காப்பவர்; வீட்டுநர்– அழிப்பவரும்; (ஆகிய) ஓர் மூவர்– ஒப்பற்ற மும்மூர்த்திகளும்; வந்த போதும்– வந்து எதிர்த்த போதிலும்; இனி– இனிமேல்; இப்பேருலகத்துள்– இப்பெரிய உலகத்திலே; பெண் நாட்டம்– பெண்ணாகிய கைகேயி தன் நோக்கத்துக்கு; ஒட்டேன்– இடம் கொடேன்.

சிங்கக் குருளைக்கு இடு
        தீஞ்சுவை ஊனை, நாயின்
வெங்கண் சிறு குட்டனை
        ஊட்ட விரும்பினாளால்