பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26



நங்கைக்கு அறிவின் திறம்
        நன்று இது! நன்று இது! என்னாக்
கங்கைக்கு இறைவன்
        கடகக்கை புடைத்து நக்கான்.

சிங்கக் குட்டிக்கு வைக்க வேண்டிய நல்ல ருசி மிகு மாமிசத்தை நாய்க்குட்டிக்கு ஊட்ட விரும்பினாள் இந்த கைகேயி; “என்னே இவள் அறிவீனம்! என்னே இவள் அறிவீனம்!” என்று கூறி கை கொட்டிச் சிரித்தான் இலக்குவன்.

சிங்கக் குருளைக்கு இடு தீஞ்சுவை ஊனை– சிங்கக்குட்டிக்கு இடுதற்கு உரிய நல்ல சுவையுடைய ஊனை; வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளால்– வெம்மையான சிறு கண்களை உடைய இளங்குட்டிக்கு ஊட்ட விரும்பினாள்; நங்கைக்கு– கைகேயியின்; அறிவின் திறம்– அறிவின் திறமை; நன்று இது– இது மிக நன்றாயிருக்கிறதே! என்னா– என்று கூறி; கங்கைக்கு இறைவன்– கங்கை கொண்டு வந்த பகீரதன் வழித்தோன்றலாகிய லட்சுமணன்; கடகக்கை புடைத்து– வீர கங்கணம் அணிந்த தன் கைகளைக் கொட்டி; நக்கான்– பின்வருமாறு கூறினான்.

“ஆகாதது அன்றால் உனக்கு
        அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் ராமன் நம் மன்னவன்
        வையம் ஈந்தும்
போகா உயிர் தாயர் நம் பூங்குழல்
        சீதை என்றே
ஏகாய் இனி; இவ்வயின் நிற்றலும்
        ஏதம்” என்றாள்.