பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

சீதையோடும், இளையவனாகிய இலட்சுமணனோடும் போனான். அந்தோ! பரிதாபம்!.

இவன் வடிவு– இவனது திருமேனியின் நிறம்; மையோ– அஞ்சனமோ; மரகதமோ– மரகத ரத்தினமோ; மறி கடலோ– புரண்டு அலை வீசும் கடலோ; மழை முகிலோ– மழை பெய்யும் நிலையில் உள்ள கார் மேகமோ; என்பது– என்று சொல்லத்தக்க; அழியா– என்றுமே அழியாத; ஓர் ஒப்பற்ற அழகுடையான்– அழகுபடைத்த இராமன்; வெய்யோன் ஒளி– சூரியனின் ஒளி; தன் மேனியின் விரிசோதியின் மறைய– தன் மேனியினின்று வெளிப்பட்டு பரவுகிற ஒளிக்குள் புகுந்திட; பொய்யோ– இல்லை என்று சொல்லும் படியான; இடையாளோடும்– இடைக்கொண்ட சீதையுடனும்; இளையானோடும்– இலக்குமணனுடனும்; போனான்– சென்றான்.

மூவரும் கங்கைக் கரையை அடைந்தனர். பொழுது போயிற்று. இருள் வந்தது. புற்களைக் கொண்டு படுக்கை ஒன்று செய்து கொடுத்தான் இலட்சுமணன்.

சிருங்கிபேரம் என்ற ஊரைச் சேர்ந்தவன் ஒருவன். அவன் பெயர் குகன்; வேடர் குலத் தலைவன். கங்கையின் இரு கரையும் சொந்தமாக உடையவன். ஏராளமான ஓடங்களை உடையவன். அவன் வந்து இராமனை வணங்கினான்.

தும்பியின் குழாத்தில் சுற்றும்
        சுற்றுத்தன்; தொடுத்த வில்லன்;
வெம்பி வெந்து அழியா நின்ற
        நெஞ்சினன்; விழித்த கண்ணன்;