பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இராமாயணத்தில்
பால காண்ட நிகழ்ச்சிகள்

சுருக்கம்


அயோத்தி நாட்டு மன்னன் தசரதன் மகப்பேறு இல்லாமை குறித்து மிக வருந்தினான். குல குருவாகிய வசிட்டரின் ஆலோசனைப்படி மகப்பேறு கருதி யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தான். அந்த யாகத்தை செய்யக் கூடியவர் ஒருவரே. அவரே கலைக்கோட்டு முனிவர்; விபாண்டக முனிவரின் வழிதோன்றல்; அவர் அங்க நாட்டில் இருந்தார். தசரதன் அங்க நாட்டிற்குச் சென்று, கலைக்கோட்டு முனிவரை தன் நாட்டிற்கு அழைத்தான். யாகத்தைப் பற்றியும் கூறினான். முனிவர் அயோத்திக்கு வந்து யாகத்தை நடத்தினார்.

யாகத் தீயினின்று ஒரு பூதம் கையிலே பொன் தட்டு ஒன்றில் அமிர்த பிண்டம் ஏந்தி வந்தது. தட்டை பூமியில் வைத்தது. யாகத்தீயில் மறைந்தது.