பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கூடின; புருவங்கள்‌ குதித்துக்‌
        கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு
        அழல்‌ கொழுந்துகள்‌
ஓடின; உமிழ்ந்தன உதிரம்‌
        கண்களே.

கைகேயி சொன்ன அந்தச்‌ சுடு சொற்கள்‌ காதிலே விழுவதற்கு முன்‌ அவனுடைய தாமரை மலர்‌ போன்ற கைகள்‌ காதுகளை மூடிக்‌ கொண்டன; புருவங்கள்‌ துடித்தன; கண்கள்‌ சிவந்தன– அனல்‌ கக்கின.

சூடின மலர்க்‌கரம்‌– வணங்கும்‌ போது குவிந்திருந்த தாமரை மலர்‌ போன்ற பரதனது கைகள்‌; சொல்லின்‌ முன்‌– கைகேயி சொன்ன அச்சுடு சொற்கள்‌ காதிலே விழுமுன்‌; செவி கூடின– காதைப்‌ பொத்தின; புருவங்கள்‌ குதித்து நின்று கூத்தாடின– புருவங்கள்‌ நெறிப்புற்று மேலும்‌ கீழும்‌ சென்றன; உயிர்ப்பினோடு அழல்‌ கொழுந்‌துகள்‌ ஓடின– தோன்றின பெருமூச்சுடனே நெருப்புச்‌ சுவாலைகள்‌ வெளி வந்தன; கண்கள்‌ உதிரம்‌ உமிழ்ந்தன– அவனது கண்கள்‌ ரத்தம்‌ கக்கின.

ஏங்கினன்‌ விம்மலோடு
        இருந்த ஏந்தல்‌ அப்‌
பூங்கழல்‌ காவலன்‌
        வனத்துப்‌ போயது
தீங்கு இழைத்ததினோ?
        தெய்வம்‌ சீறியோ?
ஓங்கிய விதியினோ?
        யாதினோ? எனா