42
கூடின; புருவங்கள் குதித்துக்
கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு
அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன உதிரம்
கண்களே.
கைகேயி சொன்ன அந்தச் சுடு சொற்கள் காதிலே விழுவதற்கு முன் அவனுடைய தாமரை மலர் போன்ற கைகள் காதுகளை மூடிக் கொண்டன; புருவங்கள் துடித்தன; கண்கள் சிவந்தன– அனல் கக்கின.
★★
சூடின மலர்க்கரம்– வணங்கும் போது குவிந்திருந்த தாமரை மலர் போன்ற பரதனது கைகள்; சொல்லின் முன்– கைகேயி சொன்ன அச்சுடு சொற்கள் காதிலே விழுமுன்; செவி கூடின– காதைப் பொத்தின; புருவங்கள் குதித்து நின்று கூத்தாடின– புருவங்கள் நெறிப்புற்று மேலும் கீழும் சென்றன; உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் ஓடின– தோன்றின பெருமூச்சுடனே நெருப்புச் சுவாலைகள் வெளி வந்தன; கண்கள் உதிரம் உமிழ்ந்தன– அவனது கண்கள் ரத்தம் கக்கின.
ஏங்கினன் விம்மலோடு
இருந்த ஏந்தல் அப்
பூங்கழல் காவலன்
வனத்துப் போயது
தீங்கு இழைத்ததினோ?
தெய்வம் சீறியோ?
ஓங்கிய விதியினோ?
யாதினோ? எனா