46
“வாக்கினால் வரம் தரக் கொண்டு
மைந்தனைப்
போக்கினேன் வனத்திடைப்
போக்கிப் பார் உனக்கு
ஆக்கினேன், அவன் அது
பொறுக்கலாமையால்
நீக்கினன் தன் உயிர்
நேமி வேந்து” என்றாள்.
“இரண்டு வரங்கள் தருவதாக வாக்களித்திருந்தார் உன் தந்தை; அந்த வாக்கைக் கொண்டு இரண்டு வரங்களையும் இப்போது பெற்றேன். அவற்றுள் ஒன்றினால் இராமனை வனத்திற்குப் போக்கினேன். மற்றொன்றினால் இந்த அரசை உனது ஆக்கினேன். அது பொறாது அரசன் தன் உயிர் போக்கிக் கொண்டான்” இவ்வாறு கூறினாள் கைகேயி,
★★
வாக்கினால்– மன்னவன் சொன்ன வாக்கினால்; இரண்டு வரம் தர– இரண்டு வரங்கள் தர; கொண்டு– அவற்றைப் பெற்றுக் கொண்டு மைந்தனை வனத்திடைப் போக்கினேன்– இளம் வயதினனாகிய இராமனைக் காட்டுக்கு அனுப்பினேன்; போக்கி– அனுப்பி விட்டு; பார் உனக்கு ஆக்கினேன்– பூமியை உனக்காகவைத்துளேன் ;நேமி வேந்து– ஆக்ஞா சக்கரத்தைஉடைய அந்த வேந்தன்; அது பொறுக்கலாமையால்– மைந்தனைப் பிரிந்த அந்ததுயரம் தாங்கு முடியாமல்; நீக்கினன் தன் உயிர்– தன் உயிரை விட்டான்; என்றாள்.
இவ்வாறு மனம் வெம்பி நொந்து கொண்டிருந்த பரதனை நோக்கி மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைக் கவனிக்குமாறு வசிஷ்டர் கூறினார்.