பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

“வாக்கினால்‌ வரம்‌ தரக்‌ கொண்டு
        மைந்தனைப்‌
போக்கினேன்‌ வனத்திடைப்‌
        போக்கிப்‌ பார்‌ உனக்கு
ஆக்கினேன்‌, அவன்‌ அது
        பொறுக்கலாமையால்‌
நீக்கினன்‌ தன்‌ உயிர்‌
        நேமி வேந்து” என்றாள்‌.

“இரண்டு வரங்கள்‌ தருவதாக வாக்களித்திருந்தார்‌ உன்‌ தந்தை; அந்த வாக்கைக்‌ கொண்டு இரண்டு வரங்‌களையும்‌ இப்போது பெற்றேன்‌. அவற்றுள்‌ ஒன்றினால்‌ இராமனை வனத்திற்குப்‌ போக்கினேன்‌. மற்றொன்றினால்‌ இந்த அரசை உனது ஆக்கினேன்‌. அது பொறாது அரசன்‌ தன்‌ உயிர்‌ போக்கிக்‌ கொண்டான்‌” இவ்வாறு கூறினாள்‌ கைகேயி,

வாக்கினால்‌– மன்னவன்‌ சொன்ன வாக்கினால்‌; இரண்டு வரம்‌ தர– இரண்டு வரங்கள்‌ தர; கொண்டு– அவற்றைப்‌ பெற்றுக்‌ கொண்டு மைந்தனை வனத்திடைப்‌ போக்கினேன்‌– இளம்‌ வயதினனாகிய இராமனைக்‌ காட்டுக்கு அனுப்பினேன்‌; போக்கி– அனுப்பி விட்டு; பார்‌ உனக்கு ஆக்கினேன்‌– பூமியை உனக்காகவைத்துளேன்‌ ;நேமி வேந்து– ஆக்ஞா சக்கரத்தைஉடைய அந்த வேந்தன்‌; அது பொறுக்கலாமையால்‌– மைந்தனைப்‌ பிரிந்த அந்ததுயரம்‌ தாங்கு முடியாமல்‌; நீக்கினன்‌ தன்‌ உயிர்‌– தன்‌ உயிரை விட்டான்‌; என்றாள்‌.

இவ்வாறு மனம்‌ வெம்பி நொந்து கொண்டிருந்த பரதனை நோக்கி மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைக்‌ கவனிக்குமாறு வசிஷ்டர்‌ கூறினார்‌.