பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


என்னை இவன்‌ இகழ்ந்தது எவ்வாறு? இந்த எல்லை கடந்த பின்னன்றோ?

மன்னவர்‌ நெஞ்சில்‌ வேடர்‌ விடும்‌ அம்பு பாயாதோ?

“பார்க்கிறேன்‌ ஒரு கை” என்று சவால்‌ விடுத்த வண்ணம்‌ நிற்கிறான்‌ குகன்‌.

இவன்‌– இப்‌ பரதன்‌; முன்னவன்‌ என்று நினைத்திலன்‌– இராமன்‌ தன்‌ அண்ணனாயிற்றே என்று கருதினான்‌ இல்லை; மொய்‌ புலி அன்னான்‌– வலிமை கொண்ட புலி போன்ற; ஓர்‌ பின்னவன்‌: ஒப்பற்ற தம்பியாகிய இலக்குமணன்‌; நின்றான்‌– உடன்‌ இருக்கின்றான்‌; என்றிலன்‌– என்று எண்ணினான்‌. இல்லை; அன்னவை பேசானேல்‌– அவ்வாறெல்லாம்‌ எண்ணாவிடினும்‌ போகட்டும்‌; என்னை இகழ்ந்தது ஏன்‌– இங்கே இருக்கின்‌ற என்னை ஒரு பொருளாக மதியாமல்‌ இகழ்ச்சியாக நினைத்‌ தெனால்‌? இவ்‌ எல்லை கடந்தன்றோ?– இவன்‌ வல்லமை எல்லாம்‌ இந்த எனது எல்லையை கடந்தால்‌ அன்றோ நிலை நிற்கும்‌? வேடர்‌ விடும்‌ சரம்‌– வேடர்‌ விடுகின்‌ற அம்பு; மன்னவர்‌ நெஞ்சில்‌ பாயாவோ– அரசர்‌ மார்பில்‌ பாயமாட்டாவோ?

ஆழ நெடுந்திரை ஆறு
        கடந்து இவர்‌ போவாரோ?
வேழ நெடும்‌ படை கண்டு
        விலங்கிடும்‌ வில்‌ ஆளோ?
தோழமை என்று அவர்‌ சொல்லிய
        சொல்‌ ஒரு சொல்‌ அன்றோ?
“ஏழைமை வேடன்‌ இறந்திலன்‌”
        என்று எனை ஏசாரோ?

4