பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


வெம்‌ கரியின்‌ ஏறு அனையான்‌
        வில்‌ பிடித்த வேலையினான்‌
கொங்கு அலரும்‌ நறும்‌ தண்தார்க்‌
        குகன்‌ என்னும்‌ குறி உடையான்‌

இப்படியாக குகன்‌ தன்‌ கூட்டத்தினரை எல்லாம்‌ சேர்த்து வைத்துக்கொண்டு யுத்தத்துக்குத்‌ தயாராக நிற்கும்போது அந்தக்‌ கரையில்‌ என்ன நடக்கிறது?

மந்திரியாகிய சுமந்திரன்‌ பரதனிடம்‌ என்ன சொல்‌கிறான்‌? யாரைப்‌ பற்றி? குகனைப்‌ பற்றி.

“இதோ தம்‌ எதிரே காணப்படுகிற இவன்‌ குகன்‌ என்ற பெயர்‌ உடையவன்‌; கங்கையின்‌ இரு கரைகளும்‌ அவனுக்குச்‌ சொந்தம்‌.

அவனுக்குக்‌ கணக்கற்ற ஓடங்கள்‌ உள்ளன. அவன்‌ இராமனுக்கு உற்ற நண்பன்‌” என்றான்‌.

கங்கை இரு கரை உடையான்‌– கங்கா நதியின்‌ இரு கரைகளையும்‌ தனக்கு உரிமையாக உடையவன்‌; கணக்கு இறத்த நாவாயான்‌– அளவற்ற படகுகளை உடையவன்‌; உங்கள்‌ குலத்‌ தனி நாதற்கு– உங்கள்‌ குலத்தில்‌ தோன்றிய ஒப்பற்ற தலைவனாகிய இராமனுக்கு; உயிர்த்‌துணைவன்‌– உயிர்‌ நண்பன்‌; உயர்‌ தோளான்‌– உயர்ந்த தோள்களை உடையவன்‌; வெம்‌ கரியின்‌ ஏறு அனையான்‌– மதத்தால்‌ வெவ்விய ஆண்‌ யானையை ஒப்பான்‌; வில்‌பிடித்த வேலையினான்‌– வில்‌ ஏந்திய படை கடல்‌ போல உடையவன்‌; கொங்கு அலரும்‌– தேன்‌ சொரியும்‌; நறு– வாசனை வீசும்‌; தன்‌ தார்‌– குளிர்ந்த மாலை அணிந்தவன்‌; குகன்‌ என்னும்‌ குறி உடையான்‌– குகன்‌ என்னும்‌ பெயர்‌ கொண்டவன்‌.