பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


“எனக்கு ராஜ்யம்‌ வேண்டாம்‌; தாங்கள்‌ திரும்பிவாருங்கள்‌; ராஜ்யத்தை ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌” என்று அழைத்தான்‌ பரதன்‌; கெஞ்சினான்‌; மன்‌றாடினான்‌.

இராமன்‌ அதற்கு இணங்கவில்லை.

“தந்தை சொல்லைக்‌ காத்து ஈரேழு ஆண்டுகள்‌ இந்த வனத்திலே கழித்து, பிறகே நாட்டுக்கு வருவேன்‌” என்‌று உறுதியாகச்‌ சொல்லி விட்டான்‌.

ராமனோ இப்படிச்‌ சொல்கிறான்‌. பரதனோ தனக்கு ராஜ்யம்‌ வேண்டாம்‌ என்கிறான்‌.

அரசன்‌ இல்லாவிட்டால்‌ நாடு என்ன ஆகும்‌? குடிகள்‌ என்ன ஆவார்கள்‌?

இந்தச்‌ சிக்கலைத்‌ தீர்ப்பது எப்படி?

சிக்கல்‌ தீர ஒரு வழி சொன்னார்‌ வசிட்டர்‌.

“ராஜ்யம்‌ இராமனுடையதாகவே இருக்கட்டும்‌. இராமன்‌ அயோத்திக்கு வராவிட்டால்‌ அவனுடைய பாதுகைகளைக்‌ கொடுக்கட்டும்‌. இராமனின்‌ பிரதிநிதியாக பரதன்‌ ராஜ்ய காரியங்களைக்‌ கவனிக்கட்டும்‌.” என்றார்‌ வசிட்டர்‌.

சிக்கல்‌ தீர்ந்தது. இராமன்‌ இணங்கினான்‌; பரதனும்‌ சம்மதித்தான்‌.

அடித்தலம்‌ இரண்டையும்‌
        அழுத கண்ணினான்‌
முடித்தலம்‌ என்ன
        முறையில்‌ சூடினான்‌