பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


படித்தலத்து இறைஞ்சினன்‌
        பரதன்‌ போயினான்‌
பொடித்தலம்‌ இலங்குறு
        பொலம்‌ கொள்‌ மேனியான்‌.

இராமனுடைய பாதுகைகள்‌ இரண்டையும்‌ பெற்றுக்‌ கொண்டான்‌ பரதன்‌; தலை மேல்‌ காத்துக்‌ கொண்டான்‌. இதுவே நமக்குக்‌ கிரீடம்‌ என்று எண்ணிக்‌ கொண்டான்‌; இராமனை வணங்கினான்; திரும்பிச்‌ சென்றான்‌.

அழுது கண்ணினான்‌–அழுத கண்களை உடையவனும்‌; தலம்‌ பொடி இலங்குறு மேனியன்‌– நிலத்தின்‌ புழுதி படிந்து விளங்கும்‌ மேனி உடையவனும்‌; பரதன்‌– (ஆகிய) பரதன்‌; அடித்தலம்‌ இரண்டையும்‌– அந்தப்‌ பாதுகைகள்‌ இரண்டையும்‌; முடித்தலம்‌ இவை என– கிரீடங்கள்‌ இவையே என்று கொண்டு; முறையில்‌ சூடினான்‌– முறைப்படி சிரமேல்‌ கொண்டவனாய்‌; படித்தலத்து இறைஞ்சினான்‌– தரையில்‌ விழுந்து வணங்கி; போனான்‌– திரும்‌பிச்‌ சென்றான்‌.

நந்தியம்‌ பதியிடை
        நாதன்‌ பாதுகம்‌
செந்தனிக்‌ கோல்‌ முறை
        செலுத்தச்‌ சிந்தையன்‌
இந்தியங்களை அவித்து
        இருத்தல்‌ மேயினான்‌
அந்தியும்‌ பகலும்‌ நீர்‌
        அழுத கண்ணினான்‌