பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


அந்தப்‌ பாதுகைளை எடுத்துக்கொண்டு பரதன்‌ அயோத்திக்குப்‌ போகவில்லை; அரண்மனைக்கும்‌ போகவில்லை.

அயோத்திக்குச்‌ சற்றுத்‌ தொலைவிலே உள்ள நத்தி கிராமம்‌ என்ற இடத்திலே சிம்மாசனத்தின்‌ மீது வைத்தான்‌.

கண்ணீர்‌ சொரிந்தவனாய்‌, ஐம்பொறிகளையும்‌ அடக்கியவனாய்‌, இராமனின்‌ பிரதிநிதியாக அரசு செலுத்தி வந்தான்‌.

நந்தி அம்‌ பதியிடை– நந்திக்‌ கிராமம்‌ எனும்‌ இடத்‌திலே; நாதன்‌ பாதுகம்‌– தலைவனான இராமன்‌ பாதுகைகளை; செம்‌ தணிகோல்‌ முறை செலுத்த– ஒப்பற்ற செங்கோலை முறைப்படி செலுத்த; அந்தியும்‌ பகலும்‌– இரவும்‌ பகலும்‌; நீர்‌ அழுத கண்ணினான்‌– நீர்ப்‌ பெருக்கு வற்றாக கண்களை உடையவனாய்‌; சிந்தை யான்‌ இந்திரியங்களை அவித்து– மனத்தினால்‌ ஐம்பொறிகளையும்‌ அடக்கி; இருத்தல்‌ மேயினான்‌– அங்கு தங்கினான்‌ பரதன்‌.

அயோத்தியா காண்டம்‌ முற்றிற்று.