பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




ஆரண்ய காண்டம்

விராதன் வகைப் படலம்


(கடவுள் வாழ்த்து)


பேதி யாது நிமிர் பேத வுருவம்
       பிறழ்கிலா
ஓதி யோதி யுணறும் தொறு
       முணர்ச்சியுதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன்
       முதலோர் தெரிகிலா
ஆதி நாத ரவரெம்
       மறிவினுக் கறிவரோ.


எங்கும் நிறைந்திருப்பனும், வேதம் வேதியர், விரிஞ்ஜன் முதலியோரின் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டவனும், எல்லாப் பொருள்களுக்கும் தலையாயவனுமாகிய இராமபிரானை வணங்கி எடுத்த கருமத்தை இனிது முடிப்போமாக!