பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1



ஓங்கும் மரன் ஓங்கி
        மலை ஓங்கி மணல் ஓங்கிப்
பூங்குலை குலாவு குளிர் சோலை
        புடை விம்மித்
தூங்கு திரை ஆறு தவழ்
        சூழுலது ஓர் குன்றின்
பாங்கர் உளதால் உறையுள்
        பஞ்சவடி மஞ்ச!

மரங்கள் ஓங்கி வளரப் பெற்றதாய்–மலைகள் உயர்ந்து காணப்பெற்றதாய்–மணல் மேடுகள் உயர்ந்து விளங்கப் பெற்றதாய் –அசைந்து செல்லும் ஆறு தவழ்வதால்–ஓரிடம் குன்றின் அருகே உள்ளது பஞ்சவடி என்று அதற்குப் பெயர்.

மஞ்ச–மைந்தனே! ஓங்கு மான் ஓங்கி–உயர்ந்த மரங்கள் வளரப் பெற்று; மலை ஓங்கி–மலைகள் உயரப் பெற்றும்; மணல் ஓங்கி– மணல் குன்றுகள் உயரப் பெற்றும்; பூ குலை குலாவு–பூங்கொத்துக்கள் விளங்குகின்ற; குளிர் சோலை–குளிர்ந்த சோலைகள்; புடை விம்மி–பக்கங்களில் விளங்கப் பெற்றும்; தூங்கு திரை–மிக்க அலை மோதும்; ஆறு தவழ்–மெதுவாகச் செல்லும் ஆறு பாயப் பெற்ற; சூழலது–சூழ்நிலை உடைய; ஓர் குன்றின் பாங்கர்–ஒரு குன்றின் அருகே ; பஞ்சவடி–பஞ்சவடி என்ற; உறையுள்–வாசஸ்தலம்; உளது–இருக்கிறது

கன்னியின் வாழை கனி
        ஈவ, கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு
        போதும் உள; தெய்வப்

1