16
(இராவணன் என்ற வடமொழிப் பெயர் கூச்சலிடுபவன் என்றும் கூச்சலிடச் செய்பவன் என்றும் பொருள்படும். சிவனது கயிலங்கிரியை இராவணன் பெயர்த்த போது அதற் கீழே அவனுடைய விரல்கள் நசுங்கின. வலி பொறுக்க முடியாமல் பேரிரைச்சல் இட்டான் அதனால் இப்பெயர் வந்தது.) மடித்த– கோபத்தால் உதடு மடிக்கப்பட்ட; பிலம் வாய்கள் தொறும்– குகை வாய் போன்று; ஆழ்ந்து அகன்று நீண்டுள்ள தனது பத்து வாய்களிலும்; புகை வந்து முந்த– கோபத்தால் புகை வெளிச் செல்லவும் துடித்த தொடர் மீசைகள்– பட பட என்று துடித்த நெடுந்தூரம் தொடர்ச்சியாக உள்ள மீசை; சுருக்கொள்ள– தீப்பிடிக்கும் படி; உயிர்ப்ப– சினத்தீயுடன் கலந்த மூச்சு விடவும்; கடித்த–கோபத்தால் நறநறவென்று கடித்த; வாள் எயிறு– கூர்மையும் ஒளியும் கொண்ட பற்கள்; மின் கனல– மின்னல் போல் ஒளி வீச; மேகத்து இடித்த உரம் ஒத்து– மேகம் இடித்த இடிபோல; உரறி– பெரு முழக்கம் செய்து; யாவர் செயல் என்றான்– இது எவருடைய செயல் என்று கேட்டான்.
○○
“கானிடை அடைந்து
புவி காவல் புரிகின்றார்
மீன் உடை நெடுங் கொடியினோன்
அனையர் மேல் கீழ்
ஊன் உடை உடம்பு உடைமையோர்
உவமை இல்லார்
மானிடர் தடிந்தனர்கள்
வான் உருவி” என்றாள்.
மானிடர் இருவர் காட்டிலே வந்து அரசு செலுத்துகின்றனர். ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவரை ஒப்பாரிலர்; மன்மதன் போன்றார்; மனித உடல் தாங்கியவர்; வாளை உருவி என் மூக்கை அரிந்து விட்டனர்.
○○