பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95



“வாயில் வழி சேரல் அரிது!
        அன்றியும் வலத்தோர்
ஆயில், அவர் வைத்த வழி ஏதல்
        அழகு அன்றால்
காய் கதிர் இயக்கு இல்
        மதிலைக் கடிது தாவிப்
போய் இ நகர் புக்கிடுவென்”
        என்று ஓர் அயல் போனான்.

இந்தக் கோபுர வாயில் வழியே போகலாமா? கூடாதா? என்று ஒரு கணம் யோசித்தான். கட்டும் காவலும் நிறைந்த அவ்வழியைக் கடந்து செல்வது சிரமம். மாற்றார் வழி ஆதலின் அவ்வழியே செல்வது தகாது என்று முடிவு செய்தான். மதிலைத் தாண்டிச் செல்வது என்று எண்ணினான். அப்பால் சென்றான்.

***

வாயில் வழி - இந்த வாயில் வழியே; சேரல் அரிது - செல்லுதல் எளிது அன்று; அன்றியும் - அல்லாமலும்; ஆயில்- ஆராயுமிடத்து; வலத்தோர் - வலிமை மிக்கவர்; அவர் வைத்த வழி ஏகல் - அவர் வைத்துள்ள இவ்வழியே செல்லுதல்; அழகு அன்று - நமக்கு அழகு ஆகாது; ஆல் - ஆதலால்; காய்கதிர் - எரிக்கின்ற சூரிய கிரணங்களும்; இல் - கடந்து செல்லாத மதிலைக் கடிது தாவிப் போய் - இம் மதிலை விரைவிலே தாண்டிச் சென்று; இந்நகர் புக்கிடுவேன்- இந்நகரின் உள்ளே புகுவேன்; என்று - என்று எண்ணி; ஓர் அயல் போனான் - அம் மதிலின் ஒரு புறத்தே போனான்; யார்? அநுமன்.

***

அநுமன் அவ்வாறு சென்றபோது, ‘நில்; நில்’ என்று கேட்டது ஒரு குரல். அவ்வாறு கூவிக் கொண்டே அநுமன்