பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101



சுவர்களிலே நானாவித இரத்தினங்கன் இழைக்கப்பட்டுள்ளன. அவை நட்சத்திரங்கள் போல் ஜ்வலிக்கின்றன. அவ்வழியே அநுமன் செல்லும்போது ஓரிடத்தில் கருப்பாகவும், இன்னோரிடத்தில் சிவப்பாகவும், பிறதோரிடத்தில் வெண்மையாகவும் தோன்றினான்.

கறுப்பாகத் தோன்றும்போது திருமாலாகவும், வெண்மையாகத் தோன்றும்போது பிரமனாகவும், சிவப்பாக தோன்றும்போது ருத்திரனாகவும் காட்சி தந்தான்.

அநுமனின் உள்ளத்தில் இருந்து நீங்காத இராமன் எப்படி காண்பாற்கு அரியனாயும், அண்டினார்க்கு எளியனாயும் தோன்றுகிறானோ அப்படி.

***


பெரிய நாள் ஒளிகொள் - பெரிய நட்சத்திரங்களின் ஒளிபடைத்த; நானாவித மணி பித்தி பத்தி - பல்வகை இரத்தினங்கள் இழைக்கப்பெற்ற சுவர் வரிசைகள்; சொரியும் - வீசுகின்ற; மாநிழல் - சிறந்த ஒளி; அங்கங்கே சுற்றலால் - ஒவ்வோரிடத்திலும் சூழ்ந்திருப்பதனாலே; காலின் தோன்றல் - காற்றின் மைந்தனாகிய அநுமன்; காண்டற்கு - பார்ப்பதற்கு; அரியனாய் - அருமையானவனாயும்; எளியனாம் - அன்புடன் நாடுவார்க்கு எளியனாயும் இருந்து; தன் அகத்து உறையும் அழகனே போல் - அநுமனுடைய நெஞ்சு நீங்காது உறையும் இராமனே போல்; (தானும்) கரியனாய் - ஓரிடத்தில் கருநிறங் கொண்ட திருமாலாகவும்; வெளியனாய் - மற்றையோரிடத்தில் வெண் நிறமுடைய பிரமனாகவும்; பிறிதோரிடத்தில் செய்யனாய் - செம்மை நிறங்கொண்ட சிவபெருமானாகவும் தோன்றுகிறான்,


***


கானக மயில்கள் என்னக்
        களிமட அன்னம் என்ன
ஆனன கமலப் போது
        பொலிதர அரக்கர் மாதர்