பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102



தேன் உகு சரளச் சோலைத்
        தெய்வ நீர் ஆற்றல் தெள்நீர்
வானவர் மகளிர் ஆட்ட
        மஞ்சனம் ஆடு வாரை

தேவதாரு மரங்கள் அடர்ந்த ஒரு சோலையிலே ஆகாச கங்கை நீரிலே தேவமாதர் நீராட்டிக் கொண்டிருந்தார்கள். யாரை? அரக்கியரை. அங்கே சென்று சீதையைத் தேடினான் அநுமன்.

***


தேன் உகு சரள சோலை - தேன் சிந்தும் தேவதாரு மரங்கள் அடர்ந்த சோலைகளில்; தெய்வ நீர் ஆற்று தெள்நீரில் - ஆகாச கங்கையின் தெளிந்த நீரில் கானக மயில்கள் என்ன - காட்டிலுள்ள மயில்கள் போலவும்; களிமட அன்னம் என்ன - களித்திடும் அன்னங்கள் போலவும்; ஆனை கமலம்போது பொலிதர - தம் முகங்களாகிய தாமரை மலர்கள் விளங்க; வானவ மகளிர் - தேவமாதர்கள்; மஞ்சனம் ஆட்ட - நீராட்ட ஆடுவாரை நீராடும் அரக்கியரை (அநுமன் கண்டான்).

***



இயக்கியர் அரக்கி மார்கள்
        நாகியர் எஞ்சில் விஞ்சை
முயல் கறையிலாத திங்கள்
        முகத்தியர் முதலினோரை
மயக்கற நாடி எங்கும் மாருதி
        மலையின் வைகும்
கயக்கமில் துயிற்சிக் கும்ப
        கன்னனைக் கண்ணில் கண்டான்.