பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103



இயக்கப் பெண்கள், அரக்கியர்கள், நாக கன்னிகைகள், வித்தியாதர மங்கையர், ஆகிய பெண்களைச் சந்தேகமில்லாதபடி நன்கு பார்த்துக்கொண்டே செல்கிறான் மாருதி.

இப்படி ஒவ்வோர் இடமாகப் பார்த்துக்கொண்டு வந்த அநுமன் மலை போன்ற உருவமும், கலக்கமற்ற தூக்கமும் கொண்டு படுத்துக் கிடந்த கும்பகர்ணனைக் கண்டான்.

***


இயக்கியர் - யக்ஷப் பெண்டிர்; அரக்கிமாகள் - அரக்கப் பெண்டிர்; நாகியர் - நாக கன்னிகைகள்; எஞ்சில் விஞ்சை - குறைவில்லாத வித்தியாதரர்; முயல் கறை இலாத திங்கள் முகத்தினர் - மருவில்லாத பூரண சந்திரன் போன்ற முகமுடைய பெண்கள்; முதலினோரை - முதலானவரை: எங்கும் மயக்கு அறநாடி - எல்லா இடங்களிலும் தெளிவுபட ஆராய்ந்து; மாருதி - அநுமன்; மலையின் வைகும் - மலை போன்ற பெரும் உருவத்துடனே படுத்துக் கிடந்த கயக்கம் இல் துயிற்சி - கலக்கமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த; கும்பகர்னனை - கும்பகர்னனை கண்ணில் கண்டான் - தன் கண்களின் நேரே கண்டான்.

***

வானவ மகளிர் கால்
        வருட, மாமதி
ஆனனங் கண்ட மண்டபத்துள்
        ஆய் கதிர்க்
கானகு காந்தம் மீக்
        கான்ற, காமர் நீர்த்
தூநிற நறுந்துளி
        முகத்தில் தோற்றவே.