பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


ஒடித்து வான் தோள் அனைத்தும்
         தலை பத்தும் உதைத்து உருட்டி
முடித்து இவ்வூர் முடித்தால் மேல்
         முடிந்தவா முடிந்து ஒழிக.

"சீதா பிராட்டியைக் கொண்டு வந்த இந்த அரக்கன் எனது கண்களுக்கு அகப்பட்ட பிறகும் உயிரோடு பிழைப்பானோ? இவனைப் பிடித்து, இவனது வலிய தோள்களை ஒடித்து, எட்டி உதைத்து, இவனது தலைகள் பத்தும் தரையிலே உருளச் செய்து, உருட்டி இவ்வூரையும் அழித்து விடுவேனாகில் மேலே நடப்பது நடக்கட்டும்.”

***

அடிமை தான் நடித்து வாழ் தகைமையதோ? - அடிமைத்தன்மை என்பது (செயலில் காட்டாமல்) வெளி வேடத்தால் நடித்து வாழும் தகைமையதோ? நன்னுதலை - அழகிய நெற்றியுடைய சீதா பிராட்டியை; பிடித்த - கவர்ந்து கொண்டு வந்த, வாள் அரக்கனார் - கொடிய அரக்கன்; யான் கண்டும் - நான் பார்த்த பிறகும்; பிழைப்பரோ? - உயிரோடு பிழைத்து இருப்பாரோ? வான் தோள் அனைத்தும் - பெரிய தோள்கள் எல்லாவற்றையும்; ஒடித்து - உதைத்து; தலை பத்தும் உருட்டி - அவனுடைய தலைகள் பத்தும் தரையிலே உருளச் செய்து; இவ்வூர் முடித்து - இந்த இலங்கா பட்டணத்தையும் நிர்மூலமாக்கி; முடித்தால் - முடிப்பேன் ஆனால்; மேல் முடிந்தவா முடிந்து ஒழிக - மேலே நடக்கிறபடி நடக்கட்டும்.

***


என்று ஊக்கி எயிறு கடித்து
         இருகரமும் பிசைந்து எழுந்து
நின்று ஊக்கி உணர்ந்து
         உரைப்பான் நேமியான் அருள் அன்றால்