பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122



ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல்
        உணர்வுடை யோர்க்கு உரித்தன்றால்
பின் தூக்கில் இவை சாலப்
        பிழைக்கும் எனப் பெயர்ந்தான்.

மனத்திலே உறுதி கொண்டான்; பற்களை நறநற என்று கடித்தான்; கரங்கள் இரண்டையும் பிசைந்தான். எழுந்து நின்றான். அதற்குள் மற்றோர் எண்ணம் தோன்றியது. “சரி நாம் கருதியவாறு செய்துமுடித்தோம் ஆயின் ஒன்று செய்ய முயன்று மற்றொன்று விளைந்தால் என் செய்வது? சீ; சீ; அறிவுள்ளவன் செய்கிற செயலா இது? இராமபிரான திருவுளத்துக்கு ஏற்ற செயலா? தவறு; தவறு” என்று எண்ணி அப்பால் போனான்.

***


என்று எண்ணி - இவ்வாறு கூறி; ஊக்கி - உள்ளத்திலே ஊக்கம் கொண்டு; எயிறு கடித்து - தன் பற்களை ‘நறநற’ என்று கடித்து; இரு கரமும் பிசைந்து - தனது கைகள் இரண்டையும் பிசைந்து கொண்டு; எழுந்து நின்று - உயர்ந்து நின்று; (பின்) ஊக்கி - மனதில் ஆராய்ந்து; உணர்ந்து - தெரிந்து; உரைப்பான் - (தன் மனத்துளே பின் வருமாறு சொல்லிக் கொண்டான்) ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் - ஒன்று செய்ய முயன்று மற்றொன்று செய்தல்; உணர்வுடையோர்க்கு - அறிவுடையவர்களுக்கு; உரித்து அன்று - உரிய செயல் ஆகாது; (அன்றியும்) நேமியான் - இராமபிரான்; அருள் அன்று - திருவுளம் ஒப்பும் செயலன்று; பின் - பிறகு; தூக்கில் - சீர் தூக்கின்; இவை - நான் கருதிய இச் செயல்கள்; சால - பெரிதும்; பிழை - தவறானவை; என - என்று எண்ணி; பெயர்ந்தான் - அப்பல் போனான்.


***