பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

சுருதி நாயகன் வரும் வரும்
        என்பதோர் துணிவால்
கருதி மாதிரம் அனைத்தையும்
        அளிக்கின்ற கண்ணாள்.

சூரிய வமிசத்திலே தோன்றியவன் இராமன். இப்பொழுது அவனுக்கு ஒரு பழி ஏற்பட்டுள்ளது. என்ன பழி? தன் மனைவியை மற்றொருவன் கவர்ந்து சென்றான் என்ற பழி. அப்பழி போக்கிக் கொள்ள வேண்டுவதே சுத்த வீரனாகிய இராமனுக்கு அழகு. ஆகவே அதற்காகவேனும் இராமன் வருவான்; தன்னை மீட்டுச் செல்வான் என்ற நம்பிக்கை சீதைக்கு. அந்த நம்பிக்கையினாலே, “அவன் வருகிறானோ” என்று எல்லாச் திசைகளையும் துருவிப் பார்க்கின்றன. அவளது கண்கள்.

***

விதி வலி கடத்தல் - விதியின் வலிமையைக் கடந்து செல்வது; போகவோ அரிது என்று - போக முடியாத அரிய காரியம் என்று; அஞ்சி - பயந்து; சுருதி நாயகன் - வேதங்களுக்குத் தலைவனான இராமன்; பரிதி வானவன் - (தான் அவதரித்த) சூரியனுடைய குலத்தையும்; வமிசப் புகழையும்; பழியையும் - இப்பொழுது தன்னால் ஏற்பட்டுள்ளதொரு பழியையும்; பாரா - பார்த்து; வரும் வரும் என்பதோர் துணிவால் - அப் பழியை நீக்கிக்கொள்ளவாகிலும் விரைவிலே வருவான் என்பதோர் தைரியத்தினாலே; கருதி - அவனது வருகையை எண்ணி; மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் - திசைகள் எல்லாவற்றையும் துழாவிப் பார்க்கும் கண்களை உடையவள் ஆனாள்.