பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168



திங்கள் ஒன்றில் என்
        செய்தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின்
        யாணர் நீர்க்
கங்கையாற்றங்
       கரை அடியேற்குத் தன்
செங்கையால் கடன்
       செய்கென்று செப்புவாய்.

ஒரு மாத காலத்துக்குள் இராமன் இங்கு வரவில்லையானால், கங்கையாற்றின் கரையிலே எனக்கு அந்திமகிரியைச் செய்யும்படி சொல்வாய்.

***

திங்கள் ஒன்றில் - நான் முன் கூறியபடி ஒரு மாத காலத்தில்; என் செய் தவம் தீர்ந்ததால் - நான் உயிர் வைத்திருப்பதாகச் சொன்ன தவ நியமம் முடிந்துவிடும் ஆதலால்; இங்கு வந்திலேன் எனின் - அந்தக் கால அளவுக்குள் இராமபிரான் இங்கு வரவில்லையானால்; யாணர் நீர்க் கங்கை ஆற்றங்கரை - அழகிய நீர்ப் பெருக்கினை உடைய கங்கை ஆற்றின் கரையிலே; அடியேற்கும் - அடியளாகிய எனக்கும்; தம் செம் கையால் - தமது சிவந்த கைகளால்; கடன் செய்க என்று - இறந்தவர்க்குச் செய்யும் அந்திம கிரியையாகிய கடனைச் செய்யுமாறு; செப்புவாய் - சொல்வாய்.

***


சிறக்கு மாமியர் மூவர்க்கும்
        சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள்
        எனும் இன்ன சொல்