பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

அறத்தினாயகன் பால்
        அருள் இன்மையால்
மறக்குமாயினும் நீ
        மறவேல் ஐயா!

“எனது மாமியாராகிய கௌசலை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவரிடமும் உமது மருமகளாகிய சீதை இலங்கையிலே இறக்கும் நிலையில் இருக்கின்றாள். உங்களுக்குத் தனது வணக்கம் தெரிவித்தாள் என்று சொல்வாய் ஐயா! தருமப்பிரபுவாகிய இராமன் என் மீது கருணை இன்மையால் சொல்ல மறப்பினும் மறவாமல் நீ சொல், ஐயா!”

***

ஐயா! - அப்பனே! சிறக்கும் - சிறப்பு மிக்க; மாமியர் மூவர்க்கும் - என் மாமியார்களான கெளசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூவருக்கும்; ஆண்டு இறக்கின்றாள் சீதை - அந்த இலங்கையிலே இறக்கும் நிலையில் உள்ள சீதை; தொழுதாள் எனும் - உங்களை வணங்கினாள் என்ற; இன்ன சொல் - இந்த வார்த்தையை; அறத்தின் நாயகன் பால் - தருமத்தின் தலைவனாகிய இராமபிரானிடத்திலே; அருள் இன்மையால் - கருணை இல்லாததால்; மறக்குமாயினும் - என்னைப் பற்றி என் மாமியாரிடம் சொல்ல அவன் மறந்து போனாலும்; நீ மறவேல் - நீ மறவாதே.

***

வந்து எனைக் கரம்
        பற்றிய வைகல் வாய்
இந்த இப் பிறவிக்கு
       இரு மாதரைச்