பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

“இந் நிலை உடையவன்
        தரிக்கும் என்று எணும்
பொய்ந்நிலை காண்டி; யான்
        புகன்ற யாவும் உன்
கைந்நிலை நெல்லியம்
        கனியிற் காட்டுகேன்
மெய்ந்நிலை உணர்ந்து நீ
        விடை தந்து ஈ” என்றான்.

“இத்தகைய மனோநிலை கொண்டுள்ள இராமன் உன்னை மீட்டுச் செல்ல ஓடி வராமல் உயிர் கொண்டு தாமதிப்பான் என்று நினைக்கிறாயே அது பொய் நிலை; உண்மை நிலை அதுவன்று. நான் சொன்னவை எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டுவேன்.”

***

இந்நிலை உடையவன் - இத்தகைய மனச் சோர்வுடைய இராமபிரான்; தரிக்கும் என்று எணும் - உன்னைப் பிரிந்து உயிர் தரிப்பான் என்று நினைக்கிறாயே, (தாமதிப்பான் என்று கருதுகிறாயே. அது); பொய் நிலை - உண்மையல்லாத நிலையாகும்; காண்டி - அதை நீ நேரிலே காண்பாய்; மெய் நிலை - இத்தகைய உண்மை நிலையை நீ உணர்ந்து - நீ அறிந்து; விடை தந்து ஈ - விடை தந்து அருள்; யான் புகன்ற யாவும் - நான் கூறியன எல்லாம்; உன் கை நிலை நெல்லி அம்கனியில் - உனது உள்ளங்கை நெல்லிக் கனி போல்; காட்டுவேன் - காட்ட வல்லேன்.

***

தீர்த்தனும் கவிக்குலத்து
        இறையும் தேவி நின்
வார்த்தை கேட்டு உவப்பதன்
        முன்ன மாக்கடல்