பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184



அல்லி அம் கமலமே அனைய
செங்கண் ஒர்
வில்லிதன் தூதன் யான்
இலங்கை மேயினேன்.

நீ சொன்ன எவரும் அல்லேன்; நீ சொன்ன அந்த அற்ப வலிமை படைத்தவர் எவர்க்கும் நான் ஏவல் மேற்கொள்ள வில்லை. அன்றலர்ந்த குளிர்ந்த செந்தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய ஒப்பற்ற வில் வீரன் தூதன் யான். இலங்கை வந்துளேன்.

***

சொல்லிய அனைவரும் அல்லேன் - நீ சொல்லியவர் எவரும் அல்லேன்; சொன்ன - நீ சொன்ன; அப்புல்லிய வலியினோர் - அந்த அற்ப வலிமை படைத்தவரின்; ஏவல் பூண்டிலேன் - கட்டளையை மேற்கொண்டு வந்தேன் அல்லன்; அல்லி அம் கமலமே அனைய - அக இதழ்கள் நிறைந்த அழகிய செந்தாமரை மலர் போன்ற; செங்கண் - சிவந்த கண்கள் உடைய; ஒர் வில்லி தன் - ஒப்பற்ற வில் வீரனது; தூதன் - தூதனாக; யான் - நான்; இலங்கை மேவினன் - இலங்கை வந்தேன்.

***

ஈட்டிய வலியும் மேனாள்
         இயற்றிய தவமும் யாணர்
கூட்டிய படையும் தேவர் கொடுத்த
         நல்வரமும் கொட்பும்.
தீட்டிய பிறவும் எய்தித்
         திருத்திய வாழ்வும் எல்லாம்
நீட்டிய பகழி ஒன்றால்
         முதலொடு நீக்க நின்றான்.