பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203


“கண்டனன் கற்பினுக்கு
        அணியைக் கண்களால்
தெண் திரை அலைகடல்
        இலங்கைத் தொல் நகர்
அண்டர் நாயக இனித்
        துறத்தி ஐயமும்
பண்டுள துயரும்” என்று
        அநுமன் பன்னுவான்.

“தேவர்கள் தலைவனே! இலங்கைத் தீவிலே கற்புக்கு அணியாக விளங்கும் சீதையைக் கண்டேன். இனித் தங்களுக்கு எவ்வித ஐயமும் வேண்டாம்” என்றான் அநுமன்.

***

அண்டர் நாயக – தேவர்கள் தலைவனே! தெள் திரை அலைகடல் – தெளிவான அலைகளை அலைக்கின்ற; இலங்கைத் தொல் நகர் – இலங்கையென்னும் பழம் நகரிலே; கற்பினுக்கு அணியை – கற்புக்கு அணியாய் விளங்கும் சீதையை; கண்களால் – எனது கண்களாலே; கண்டனன் – பார்த்தேன்; இனி – இனிமேல்; ஐயமும் – சீதை உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ, எங்கே இருக்கிறாளோ எனும் ஐயப்பாடும்; துயரமும் – துன்பமும்; துறத்தி – நீங்குவாயாக; என்று – என்று சொல்லி; அநுமன் பன்னுவான் – அநுமன் மேலும் சொன்னான்.

***

வில் பெருந் தடந்தோள் வீர!
        வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நல் பெரும் தவத்தள் ஆய
        நங்கையைக் கண்டேன் அல்லன்.