இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
205
உள்ளே போவதும் வெளியே வருவதுமாக உடல் பூரித்தது. அப்போது சுக்கிரீவன் இராமனைப் பார்த்துச் சொல்கிறான்.
“ஐயனே! சீதாப்பிராட்டி இருக்கும் இடம் அறிந்து கொண்டோம். இனியும் தாமதம் ஏன்?” என்று தூண்டினான்.
உடனே இராமன் எழுந்து நின்றான். “எழுக வானரப்படை” என்றான்.
எழுபது வெள்ளம் வானர சேனைகள் எழுந்தன.
அநுமன் வழிகாட்டி முன்னே சென்றான்.
பன்னிரண்டு நாட்கள் வழி நடந்து சென்று தென்திசைக் கடல் கண்டார்கள்.