இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
210
13. எரியூட்டு படலம்
வாலில் இட்ட தீயுடன் இலங்கை மாநகரையே தீயிடுகிறான் அநுமன். இதுவே இராவணனின் அழிவுக்கு முன் அறிகுறியாக அமைகிறது.
14. திருவடி தொழுத படலம்
அநுமன் இலங்கைக்கு எரியூட்டிய பின், பிராட்டியைக் காணச் செல்கிறான். அன்னையின் தாள்களிற் பணிந்த அவனை, அன்னை வாழ்த்தி அனுப்புகிறாள். விரைந்து சென்று, குன்றிடை குதிக்கிறான், ஜெய மாருதி. நண்பர்கள் மகிழ்கின்றனர். விரைகிறான் அண்ணலிடம். பிராட்டியாரின் தவ நிலையையும் கற்பின் சிறப்பையும் மிக மிகச் சிறப்பாகக் கூறி, பிராட்டியின் பெருமையை வானளாவ புகழ்கிறான்.
பின்?
”தென்றிசைப் பரவைக் கண்டார்” என்று முடிக்கிறார் கம்பன்.
இதுவே அடுத்த காண்டத்தின் அஸ்திவாரமாகிறது.