பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


என்ற அக்குரங்கு வேந்தை
        இராமனும் இரங்கி நோக்கி
உன்றனக்குரிய இன்ப
        துன்பங்கள் உள்ள முன்னாள்
சென்றன போக மேல் வந்து
        உறுவன தீர்ப்பல் அன்ன
நின்றன எனக்கும் நிற்கும்
        நேர் என மொழியு நேரா.

என்று சுக்கிரீவன் சொன்ன உடனே அந்தக் குரங்கு அரசனைப் பார்த்து இரங்கி இராமன் சொல்கிறான்; “உனக்கும் எனக்கும் நேர்ந்த துன்பங்கள் போனவை போகட்டும். இனி வரும் துன்பங்களை அவை நேராமல் உன்னை நான் பாதுகாப்பேன். அத் துன்பங்கள் உனக்கும் எனக்கும் சமம்”.

***


என்ற - என்று சொன்ன; அக்குரங்கு வேந்தை - அந்தக் குரங்கரசனாகிய சுக்கிரீவனை இரங்கி நோக்கி - கருணை யோடு பார்த்து; உன் தனக்கு உரிய -உனக்கு உரிய; இன்ப துன்பங்கள் உள்ள -இன்ப துன்பங்களாய் உள்ளவற்றில்; முன் நாள் சென்றன போக - கடந்த காலத்தில் நிகழ்ந்தவை போக; மேல் வந்து உறுவன - இனிமேல் வரும் துன்பங்களை; தீர்ப்பல் - வராமல் தீர்ப்பேன்; அன்ன நின்றன -அவை; எனக்கும் உனக்கும் நேர் - எனக்கும் உனக்கும் சமம்; என - என்று; மொழியும் நேரா - உறுதி மொழி கூறி.

***


“மற்று இனி உரைப்பது என்னே?
        வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்
        தீயரே எனினும் உன்னோடு