221
கடல் காண் படலம்
இராமபிரான் கடலைக் கண்ணாற் கண்டதை கூறும் படலம் இது. கடலைக் கண்ட இராமன் துயர் உறுகிறான். கடலிலே உள்ள முத்துக்களும் சங்குகளும் பிராட்டியின் நினைவையும் பிரிவையும் இன்னும் அதிகமாகத் தூண்டுகின்றன. தென்றல் தீயாகச் சுடுகிறது.
ஆரவாரத்துடன் ஓங்கிய அலைகள் எப்படியிருக்கின்றன? பெரியோர் முதன்முதலாக வருவதைக் கண்டு, தமது கைகளைத் தூக்கிய வண்ணம் மகிழ்ச்சியினால் ஆரவாரஞ் செய்துகொண்டு விரைவோடு அன்னாரை எதிர் கொள்வது போலிருக்கின்றன.
மேலும் கம்பநாடன் அடுத்தப் பாட்டில் என்ன கூறுகிறான்?
***
இன்ன தாய கருங்கடலை
யெய்தி இதனுக் கெழு மடங்கு
தன்னதாய நெடு மானந்
துயரங் காத லிவை தழைப்ப
என்ன தாகு மேல் விளைவு
என்றிருந்தான் இராம னிக லிலங்கைப்
பின்னதாய காரியமும் நிகழ்ந்த
பொருளும் பேசுவாம்.
இராமன் கடலை யடைந்த பின், தன்மானம் ஆகியன ஏழு கடலாக தன்னுடைய உள்ளத்திலே மிக, மேல் நடக்க வேண்டியதைப் பற்றிச் சிந்தித்த வண்ணம் இருந்தான்,
***