பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

விட்டிடுது மேல், எளியம் ஆதும்;
        அவர் வெல்லப்
பட்டிடுது மேல், அதுவும் நன்று;
        பழி அன்றால்.

“பெரியோர் செய்யும் செயல் நீ ஏதும் செய்தாய் இல்லை; நம் குலத்திற்கே சிறுமை தேடிவிட்டாய்; இனி சீதையைக் கொண்டு போய் விட்டுவிடலாம் எனில் அது கேவலம். எனவே போர் செய்வது தவிர வேறு வழியில்லை. தோல்வியுற்று இறந்து பட்டாலும் நன்றே; பழியில்லாது போகும்.”

***

மன்னா - மன்னனே! சிட்டர் செயல் செய்திலை - பெரியோர் செய்யும் செயல் புரிந்தாயில்லை; குலச்சிறுமை செய்தாய் - நம் குலத்திற்கே இழிவு வரும் செயல் செய்தாய். இனி - இனிமேல்; மட்டவிழ் மலர்க் குழவினாளை - தேன் சொரியும் மலரணிந்த கூந்தலுடைய சீதையை; விட்டிடுது மேல் - விட்டுவிட்டாலோ; எளிமையாம் - நாம் எளியவர் ஆவோம்; (எனவே, சீதையை விடாமையால் அவர்கள் தம்மீது போர் தொடுக்க) அதுவுமவர் வெல்லப் - அந்தப் போரிலும் அவர்களே வெற்றிபெற; பட்டிடுதுமேல் - நாம் இறந்துபடுவோமாயின், அதுவும் நன்று - அதுவும் நல்லதே; பழியன்றால் - பழியில்லாது போம்.

***

ஊறுபடை ஊறுவதன்
        முன்னம் ஒரு நாளே
ஏறுகடல் ஏறி, நரர்
        வானரரை எல்லாம்
வேறு பெயராத வகை
        வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம்
        என்பது நுவன்றான்.