பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16



வாலி இருக்குமிடத்தைக் காட்டுமாறு கேட்டான் இராமன். உடனே வானரங்கள் சூழப் புறப்பட்டான் சுக்ரீவன். எல்லாரும் கிட்கிந்தை நோக்கி நடந்தனர்.

அவர்கள் சென்ற மதங்க மலைச் சாரலை வர்ணிக்கிறார் கவி. அம்மலைச் சாரல் வழியே அருவிகள் பாயும்; பாம்புகள் படம் எடுத்து ஆடும்; அஞ்சி ஓடும்; பெரிய யானைகள் ஓடும்; யாளிகள் ஓடும்; குளங்களிலே மீன்களுடன் தண்ணீர்ப் பாம்புகள் ஒடும்; வேங்கையோடு கருங்குரங்கு ஓடும்; மலைச் சிகரங்களிலே மேகம் ஓடும்.

நீடு நாகம் ஊடு - நீண்ட மலைகளின் வழியாக, மேகம் ஓட - மேகங்கள் ஓட; நீரும் ஓட நீரும் பெருகிப் பாய; ஆடும் நாகம் ஓட படமெடுத்து ஆடும் பாம்புகள் அஞ்சி ஓட, மானம் யானை ஓட - பெரிய யானைகள் ஓட ஆளி போம் -யாளிகள் சஞ்சரிக்கும்; மாடு நாக நீடு நீரல் - சுவர்க்கத்தை மறைக்கும் நீண்ட மலைச் சாரலில்; வாளை ஓடும் வாவியூடு - (உள்ள) குளங்களிலே; வாளை மீன்களுடன்; நாகம் ஓட - பாம்புகள் ஓட வேங்கையோடும் - புலிகளோடும் யூகம் ஓடுமே - கருங்குரங்கு ஓடுமே.

***


.மருவி ஆடும் வாவி தோறும்
        வாணயாறு பாயும், வந்து
இருவி ஆர் தடங்கள்மீனின்
        ஏறு பாயும்; ஆறுபோல்
அருவி பாயும் ஒன்றில் ஒன்றில்
        யானை பாயும்; ஏனலில்
குருவி பாயும்; ஓடி மந்தி
        கோடு பாயும், மாடெலாம்