பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252



“எந்தையே! இக்கடலின் வற்றாத நீர், இறுகி கல்லாகிப் போனால் என்னிடத்து வாழ்கின்ற அளவிலா உயிர்கள்யாவும் விரைவில் மாண்டு ஒழியும். ஆதலால், என்மீது இட்ட கல் ஒன்றுகூட அழிந்து விடாதபடி, எக்காலமும் நிலைத்திருக்க அவற்றைத் தாங்கி நிற்பேன்; என் தலைமேல் ‘சேது’ என்ற ஓர் அணையைக் கட்டி அதன்மேல் எளிதாகச் செல்வாயாக” என்று கூறினான் வருணன்.

***

எந்தாய் – என் தந்தை போன்றவனே ‘கல் என வலித்து நிற்பின்–(நான் வற்றாமல்) கல்லை யொப்ப இறுகி நிற்பேனாகில்; கணக்கு இலா உயிரிகள் எல்லாம் – (என்னிடம் வாழும்) எண்ணிறந்த உயிர்கள் எல்லாம்; ஒல்லையின் உலந்து வீயும் – விரைவினில் கெட்டழியும்; இட்டது ஒன்று ஒழுகா வண்ணம் – வைத்தது நகராதபடி; எல்லையில் காலம் எல்லாம் இனிதின் ஏந்துவன் - எண்ணிறந்த காலம் எல்லாம் இனிது தாங்கி நிற்பன்; சேது என்று ஒன்று என் சிரத்தின் மேலாய், இயற்றி - சேது என்ற ஒரு அணையை என் தலைமீது அமைத்து, செல்லுதி - கடந்து செல்வாயாக; என்று மொழிந்தான் வருணன்.

***

வருணதேவன் தன்மீது அணைக் கட்டினால் அதைத் தாங்குவதாக உறுதி கூறினான்.

வருணன் சொல்லியபடி, நளனும் வானரரும் அணைக் கட்டத் தொடங்கினர்.

சேது அணையும் உருப்பெற்றது.

***


பப்பு நீர் ஆய வீரர்,
        பரு வரை கடலில் பாய்ச்சத்,
துப்பு நீர் ஆய தூய
        சுடர்களும் கறுக்க வந்திட்டு