பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

“இரங்குவானாகில், இன்னம் அறிதி”
        என்று உன்னை ஏவும்
நரன் கொலாம் உலக நாதன்’ என்று
        கொண்டரக்கன் நக்கான்.

'சிவன் என்று சொல்வார்கள்; திருமால் என்று சொல் வார்கள்; பிரமன் என்று சொல்வார்கள். இப்படி உயர்வாக வியந்த சொல்லப்பட்ட இவர்களன்றி கேவலம் குரங்குகளை எல்லாம் திரட்டிக் கொண்டு இந்தச் சிறு குட்டையாகிய கடலுக்கு அணைகட்டி வந்து விட்டதனாலேயே தன்னைப் பெரியவனாக எண்ணி, என்பால் தூது அனுப்பும் மனிதனோ உலகநாதன், என்று கூறி நகைத்தான் இராவணன்.

***

அரன் கொல் ஆம் - சிவபெருமானோ; அரிகொலாம் - திருமாலோ; அன்றி - அல்லது; அயன் கொலாம் - பிரமன் தானோ; என்பார் அன்றி -இவர்களேயன்றி; குரங்கு எலாம் கூட்டி - குரங்குகளை எல்லாம் ஒரு படையாகத் திரட்டிக் கொண்டு; வேலைக் குட்டத்தைச் சேது கட்டி - சிறிய குட்டை போன்ற இச்சிறு கடலை அணை சேர்த்து (வந்து விட்டதானாலே தன்னைப் பெரியவனாக எண்ணிக்கொண்டு; இன்னும் - இப்போதாவது; இரங்குவான் ஆகில் - தான் செய்த காரியங்களுக்கு வருந்துவான் ஆனால் (போர் செய்யாது விடலாம்); அறிந்து வா - என்று உன்னை ஏவும்; நரன் கொலாம் உலக நாதன் - அற்ப மனித உலகிக்கு நாதன்; என்று கொண்டு - என்று சொல்லிக்கொண்டு;நக்கான் - நகைத்தான்.

***

‘கங்கையும் பிறையும் குடும்
        கண்ணுதல் கரத்து நேமி
சங்கமும் தரித்த மால், மற்று
        இந்நகர் தன்னைச் சாரார்