பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279

வானமும் வையமும்
        வளர்ந்த வான்புகழ்
போனதோ புகுந்ததோ
        பொன்றுங் காலமே

விவரமறிந்தான் கும்பகன்னன் ‘கொடிய போர், தோன்றி விட்டதோ? கற்புக்கரசி சானகியின் துயர் இன்னும் நீங்க வில்லையோ? வானத்திலும் வையத்திலும் வளர்ந்த உன் புகழ் போய்விட்டதோ; அரக்கர் குலத்திற்கு அழிவு காலம் வந்துவிட்டதோ?’ என்று வேதனையோடு கூறினான்.


***

வெம்சமர் ஆனதோ - கொடிய போர் மூண்டு விட்டதோ; அலகில் - எல்லையில்லாத கற்புடைச் சானகி-கற்புடைய சீதையின்; துயர் இனந் தவிர்ந்ததில்லையோ - துன்பம் இன்னும் நீங்கிய பாடில்லையோ; வானமும் வையமும் வளர்ந்த - விண்ணிலும் மண்ணிலும் பரவிய;வான்புகழ்-பெரும்புகழ்; போனதோ - போயிற்றோ; பொன்றுங் காலம் புகுந்ததோ - அரக்கர்க்கு அழிவு காலம் வந்து விட்டதோ.

***

புலத்தியன் வழிமுதல்
        வந்த பொய்யறு
குலத்தியல்பு அழிந்தது
        கொற்றம் முற்றுமோ?
வலத்தியல் அழிவதற்கு
        ஏது மையறு
நிலத்தியல் நீரின் இயல்
        என்னும் நீரதால்

அத்துடனா?