பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281


‘இந்திரற்கு அவனுடைய வாழ்வினையும், உன் கிளைஞர்க்கு அழிவினையும் கூட்டியதோடு உன் தீச்செயலால் உனக்கும் அழிவு தேடிக் கொண்டாயே’ என்றான் அண்ணனைப் பார்த்து.

***

(உனது செயலால்) இந்திரற்கு-இந்திரனுக்கு; உலகும் - அவனுடைய உலகமும்; கொற்றமும் - வெற்றியும்; கொடுத்தனை - கொடுத்துவிட்டாய்; நின்னையும் நின் பெரும் கிளையும் கெடுத்தனை - உன்னையும் உன் பெரிய சுற்றத்தையும் கெடுத்தாய்; பலவகை - பலவகைச் செயல்களை படுத்தனை - நீ அழியுமாறு செய்துவிட்டாய்; அமரர் தங்களை விடுத்தனை - தேவர்களை விடுவித்தவன் ஆனாய்; இவ்வேறு - இனியேல் (இந்தத் தீவினைப் பயன்களினின்று) வேறு வீடும் - விட்டு நீங்கும் வழியும்; இல்லையால்.

***

கும்பகன்னன் மேலும் இராவணன் மனத்தை மாற்ற மன்றாடுகிறான்.

“உனக்கு மேன்மை அளித்தது. தருமம்; இப்போது அதற்கு எதிராக நீ செயல்படுகிறாய். நீ அதனைக் கைவிட்டதால் நீ அழிவதோடு அன்றி நம் குலமே அழிய வழி கோலுகிறாய். சீதையை விட்டுவிடாவரையில் அநுமன் போன்றவரை துணைக்கொண்டு, இராமன், நம்மை அழிப்பான். இஃது உறுதி. விபீடணனைப் போல் இராகவனிடம் சரண் அடைந்தால் உய்ய வழியுண்டு. அதை நீ ஏற்க மறுத்தாலும், சீதையை விட்டு சமாதானஞ் செய்துகொள்ள மனமில்லாவிட்டாலும், போரைத் தவிர வேறு வழியே கிடையாது. கூட்டங் கூட்டமாக நம் சேனை போருக்குப் போய் அழிவதைக் கண்டு பின்னால் வருந்தாதே!” என்று நல்லுரை கூறினான்.