287
மகரக்கண்ணன் தன் சேனையோடு அழிந்த செய்தியைக் கேட்டான் இராவணன். இந்திரசித்தை அழைத்தான். மகன் தந்தைக்கு ஆறுதல் கூறினான்.
“வருந்தாதீர்கள். நான் நரரையும் வானரரையும் கொன்று வருவேன்!” என்று கூறி அறுபது வெள்ளம் சேனையோடு சென்றான். வானர சேனை நிலை கெட்டு ஓடிற்று. அநுமன், சுக்ரீவன், அங்கதன், இராம லட்சுமணன், விபீடணன் ஆகிய சிலரே நின்றனர். அநுமன் தோளின் மீது இராமன் எழுந்து நின்றான். அங்கதனோ, தன் தோளின் மேல் இலட்சுமணனை சுமந்தான். நீலன் முதலாயினோர் மரங்களையும் குன்றுகளையும் ஏந்தி, அரக்கரை முன்னேற விடாமல் தடுக்கத் தொடங்கினர். இராமன் அவர்களை பின்னால் செல்லும்படி கூறினான். ஏன்? இந்திரசித்து தெய்வப் படைகளை ஏவுவான். அவைகள் அவர்களைத் தாக்கி அழிக்கும் என்பதை உணர்ந்ததால் அவ்வாறு செய்தான். முன் நின்ற இராம லட்சுமணன் அறுபது வெள்ளச் சேனையை அழித்ததும், அவர்கள் பேராற்றலைக் கண்டு பிரமித்துப் போனான் இந்திரசித்து. அநுமன் இது கண்டு தோள் கொட்டி ஆரவாரித்தான். இந்த ஆரவாரத் சத்தம் கேட்டு அரக்கர்பின்னோக்கி ஓட, இந்திரசித்து தான் ஒருவனே இராம லட்சுமணரை எதிர்க்க வந்தான். அவன் தனித்து வந்து ‘நீவிர் எவ்வண்ணம் பொரப் போகின்றீர்’ என்று கேட்டான்.
அப்போது லட்சுமணன்.
***
வாளிற் றிண்சிலைத் தொழிலினின்
மல்லினின் மற்றை
ஆளுற்று எண்ணிய
படைக்கல மெவற்றினும் அமரில்