பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

கோளுற்று உன்னோடு குறித்தமர்
        செய்து உயிர் கொள்வான்
சூளுற்றேன் இது சரதமென்று
        இலக்குவன் சொன்னான்.

“வாள், வில், உடல் வலி, படை ஆகிய இவற்றினும் அதிக வலிமை பெற்ற உன்னோடு நேருக்கு நேர் நின்று பொருது, உன்னுயிரைக் கொல்வதாக நான் செய்த சபதம் இப்போது நிறைவேறுவதற்காகவே நான் பொருத வந்தேன்” எனக் கூறினான் இளையவன்.

***

வாளில் - வாள் கொண்டும்; திண்சிலை தொழிலினில் - உறுதியான வில் ஆற்றலினாலும்; மல்லினில் - மற்போர் புரிந்தும்; மற்றை - வேறான; ஆள் உற்று - ஆளுதல் பொருந்தி: எண்ணிய - எண்ணப்பட்ட; படைக்கலம் எவற்றினும் - போர்க் கருவிகள் எல்லாவற்றாலும்; அமரில் - போரில்; கோள் உற்று - வன்மை பொருந்த ;உன்னொடு குறித்து - உன் நேர் நின்று; அமர் செய்து - போர் புரிந்து; உயிர் கொள்வான் - உங்கள் உயிரைக் கொள்ளும் பொருட்டு; சூளுற்றேன் - வஞ்சினம் கூறினன்; இது சரதம் - இது உறுதி; என்று - என்று ;இலக்குவன் சொன்னான் - லட்சுமணன் சொன்னான்.

***

இந்திரசித்தும் எதிர் சபதம் செய்தான். அது என்ன? லட்சுமணனை நோக்கி “உன்னைக் கொன்று பின் இராமனைக் கொல்வேன்! என்றான். அத்துடனா? உங்களால் கொல்லப்பட்ட என் சிற்றப்பனுக்கும், இறந்த தம்பிமார்க்கும் உங்கள் இரத்தத்தைக் கொண்டு நீர்க்கடன் செய்வேன்!” என்றான் ஆணவத்துடன்.