பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289


லட்சுமணன், “உனக்கு, உன் தந்தையும், உன் தந்தை முதலியோர்க்கு விபீடணனும் அந்திமக் கடன் செய்வார்கள்!” என்று நிகழப்போகும் சங்கதிகளை முன்பே கூறினான்.

கொதித்தெழுந்தான் இந்திரசித்து. லட்சுமணனுடன் கடும்போர் செய்தான். இந்திரசித்தின் தேரை அழித்தான் இளையவன். இராவணனின் மகன், லட்சுமணன் மீதும், அங்கதன் மீதும் கணைகளைத் தூர்த்து, சங்கால் முழங்கினான். பத்து கணைகளை விட்டான் லட்சுமணன். இந்திரசித்தின் கவசத்தைப் பெயர்த்தான். இந்திரசித்தோ வானில் மறைந்தான். பிரம்மாத்திரத்தைத் தொடுக்க லட்சுமணன் முனைந்தபோது, இராமன் அதைத் தடுத்தான்.

இதை அறிந்த அரக்கன் மைந்தன் என்ன செய்தான்? போர்க் கோலம் களைந்த தசரத புதல்வர்கள் மீது பிரம்மாத்திரம் விடுத்தற்கு முயற்சி கொண்டு அதற்குரிய வேள்வியைத் தொடங்க ஆரம்பித்தான். சூரியன் அத்தமிக்கவே, வானர சேனைக்கு உணவு கொண்டு வருமாறு விபீடணனைக் கட்டளையிட்டான் அண்ணல். சேனையைக் காக்குமாறு இளையவனைப் பணித்தான். அத்திர பூசை செய்யச் சென்றான்.

இந்திரசித்து தன் தந்தையிடம் சென்றான். நடந்ததைச் சொன்னான். “மாறு செய்யாதபடி மாற்றான் என்னை மறந்திருக்கையில் வஞ்சனையாக பிரம்மாத்திரம் விடுத்து பகையை முடிப்பேன்” என்றான். இந்த வஞ்சனைக்கு உதவியாக மகோதரனை மாயைப் போர் புரியுமாறு இராவணன் ஆணையிட்டான். அரக்கர் வானரரைத் தாக்கினர். அநுமன் அரக்கரை நீராக்கினான். நீலன் முதலியோர் அரக்கர் படையுடன் கலந்தனர்.

அநுமனுக்கும் அகம்பனுக்கும் தண்டு போர் நடந்தது. அநுமனின் தண்டு, அகம்பனின் தண்டையும் வலக்கரத்-

கி.—19