பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291


‘இராமன் மாண்டான்’ என அரக்கர் கெக்கலித்தனர். செய்தி அறிந்தான் இராவணன். இறந்துபட்ட அரக்கர் உடல்கள் அனைத்தையும் கடலில் வீழ்த்தும்படி கூறினான். இதனால் ஏற்பட்ட விளைவு? பின்னர் வானரர் தெளிந்து எழுந்தனர். அரக்கரோ, இராவணனின் செயலால் ஒழிந்தனர்.

மீண்டும் மாயையால் பிராட்டியை வசப்படுத்த திட்டம் இட்டான். அன்னையை விமானத்திலேற்றி களத்தின் அவலநிலையைக் காட்டுமாறு செய்தான். அன்னை இராமன் லட்சுமணன் நிலைக் கண்டாள். அரற்றினாள்; அழுதாள்; சீதையின் நிலைக் கண்டாள் திரிசடை; “இராமன் புண்டரீகன்; அவனுக்கு இறுதி என்பது கிடையாது. இளையவனின் வதனம் ஊழ் நாளிரவி என்ன ஒளிர்வதால் உயிருக்கு இன்னல் இல்லை. அது மட்டுமா? இராமபிரான் இறந்தபின் ஈரேழு உலகங்களும் அல்லவா இறந்திருக்கும். மாருதிக்குப் பிராட்டி கொடுத்த ‘சாகாவரம்’ எப்படிப் பொய்யாகும்?” எனக் கூறி தேறுதல் கூறினாள். அரக்கியர் மன ஆறுதலடைந்த சீதையை மீண்டும் வனத்திற்கே அழைத்துச்சென்றனர்.

***

உணவு கொண்டு வந்தான் விபீடணன். போர்க்களத்திலுள்ள நிலைக் கண்டான். இராமனின் கலங்கிய நிலைக் கண்டு கலங்கினான். மெல்ல சென்று அநுமனின் களைப்பை நீக்கினான். இருவரும் சாம்பவானை நாடிச் சென்றனர். விவரம் கூறினவுடன் சாம்பவான் என்ன சொன்னான்?

***


‘எழுபது வெள்ளத் தோரும்
        இராமனும் இளையகோவும்
முழுவதும் இவ்வுலக மூன்று நல்லற
        மூர்த்தி தானும்