பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

299


குதிரை வலிமையற்று சிதறவே, இந்திரசித்து வானத்தில் மாயமாய் மறைந்தான். கல் மாறி பொழிந்து வானர வீரரை மடியச் செய்தான். வானில் மறைந்திருந்த அரக்கர்கோன் மகனை இளையவனின் வாளிகள் தாக்கின. இரத்தம் பெருக நின்றான் இந்திரசித்து. லட்சுமணன் இந்திரசித்தின் விற்பிடித்த கையை அம்பெய்தி, கொய்தான். இந்திரசித்து மாயப்போர் புரிந்து, லட்சுமணனை ‘நின்னை முடித்தன்றி முடியேன்’, என்று சபதம் செய்தான்.

லட்சுமணன் இராமனை மனத்தில் நினைத்தான். ‘நீ பரம்பொருளானால் இந்திரசித்தைக் கொல்க’ என்று அம்பு ஏவினான். அம்பு இந்திரசித்தின் தலையை அறுத்தது. அவன் உயிரற்ற உடல் முதலில் மண்ணில் விழுந்து துடித்தது. பின்னர் அங்கதன் இந்திரசித்தின் தலையை கையிலேந்தி, இராமனிடம் செல்கிறான்.

இந்திரசித்து இறந்ததைக் கேட்ட இராவணன், அவனது இழப்பால் பெரிதும் துயருற்றான். புத்திர சோகம் அவனை வாட்டியது. அவனது இருபது கண்களும் இரத்தம் சிந்தின. துயர் தங்காது தன்னையே திட்டிக்கொண்டான்.

இந்திரச்சித்தின் மார்பைக் கண்டான். எத்தகைய மார்பு? அம்புகள் அழுந்திய மார்பு. பின்? அவன் சோகம் கரை புரண்டு ஓடுகின்றது.

***


அப்பு மாரி யழுந்திய
        மார்பைத் தன்
அப்பு மாரி யழுதிழி
        யாக்கையின்
அப்பு மாரின் அணைக்கும்
        அரற்றுமால்
அப்பு மானுற்ற
        தியாவருற் றாரரோ.