பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303



விட்ட போதினில் _ தொடுத்த அளவில்; ஒருவனை வீட்டியே மீளும் - ஒருவனை அழித்தே திரும்புவதும் பட்ட போது - அது மேலே தாக்கிய அளவில்; அவன் - தாக்கப் பெற்றவன்; நான்முகன் ஆயினும் - பிரம தேவனே யானாலும்; படுக்கும். (அவனையும்) ஒழிக்க வல்லதும் ஆன; அது வேல் - அந்த வேலை; வட்டம் வலம் கொடு வணங்கி வாங்கினன் - வட்டமாக வலங்கொண்டு வணங்கி ஏற்று; எட்ட நிற்கலா _ சேய்மையினில்லாது அண்மையில் நின்ற; தம்பி மேல் - தம்பியான விபீடணன்மீது; வல் விசைத்து எறிந்தான் - வேகமாக வீசினான்.

***


வேல் தன்மீது ஏவப்பட்டதைக் கண்ட வீபிடணன், ‘இப்படை என்னுயிரை மாய்க்கும்’ என்றான் இளைய வனிடம்.

‘அஞ்சாதே!’ என்று லட்சுமணன் அம்பு மாரி பெய்தான். ஆனால் வேலை அம்பு மாரி தடுத்து நிறுத்த இயலவில்லை. அவ் வேலை ஏற்குமாறு லட்சுமணன் விபீடணன் முன் செல்கிறான். லட்சுமணனை தடுத்து முன் செல்கிறான் விபீடணன். இருவரையும் விலக்கி அங்கதன் முன்னேறுகிறான் சுக்ரீவனோ அவனை விலக்கு கிறான். அவனையும் விலக்கி அநுமன் முன் சென்றாலும், லட்சுமணன் அவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு தானே அந்த வேலைத் தன் மார்பில் ஏற்கிறான். இத்தருணத்தில் விபீடணன் கதையினால் இராவணனுடைய தேர்ப் பரிகளையும் பாகனையும் அழிக்கின்றான்.

வேலேற்ற லட்சுமணன் நிச்சயம் இறப்பான் என்று நினைத்து இராவணன் போர்க்களத்தை விடுத்துச் செல் கின்றான். லட்சுமணனுக்கு நேர்ந்த அவகேடு நோக்கி, சாகத் துணிகிறான் இராவணனின் தம்பி.

அப்போது சாம்பன் வருகிறான். அவனைத் தடுக்கிறான். எப்படி?