பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308


(இராவணன் வருகையைக் கண்ட) கவிசேனை - வானரப் படைகள்; தொழும் கையொடு - (தம்) கூப்பித் தொழுது வணங்கும் கைகளொடு; வாய் குழறி - வாய் பேசமுடியாமல் குழறி; மெய் - உடல்கள்; முறை துளங்க - முறையாக நடுங்க; விழுந்து - தரையில் விழுந்து; இடு பூசல் மிக - இடுகின்ற பேரொலி அளவு மிக; இராமன் - {அவ்வொலி கேட்ட) இராமபிரான்; அந்நாள் - முன்னொரு காலத்தில்; விண்ணோர் அழுந்த- தேவர்கள் (தங்கள் துயர் தாங்கமாட்டாமல்) மனந்தாழ; 'அஞ்சல்' என - 'அஞ்சாதீர்கள்' என்று; அரவத்து அமளி எழுந்தபடியே- (திருப்பாற் கடலில்) ஆதிசேஷனாகிய படுக்கையினின்று எழுந்த அவ்வண்ணமே; கடிது எழுந்தனன் - (வானரர்களைக் காக்க) விரைவாக எழுந்தான்.

***

இந்திரன் கட்டளைப்படி, மாதலி தேர்கொண்டு வருகிறான். இத்தேர் தெய்வீகமானது. இராமனிடம் மாதலி இத்தேரின் பெருமைகளைக் கூறுகிறான். ஒருவேளை இது அரக்கரால் மாயமாக அனுப்பப் பெற்றதோ என சிறிது ஐயுறும்போது, அத்தேரின் குதிரைகள் வேதம் ஓதுவதைக் கேட்கிறான். என்றாலும் சிறிது ஐயமே. மாருதி இலட்சுமணன் ஆகியோருடன் ஆலோசித்து, பின் தெளிகிறான் இரகுவீரன்.

***


விழுந்து புரள் தீவினை நிலத்தொடு
        வெதும்ப,
தொழும் தகைய நல்வினை
        களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர்
        அந்தணர் கை முந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது
        ஏறினான் - இராமன்.