பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309


வந்தக் தேரில் ஏறினான் இராமன். அக்கணமே தீவினை மண்ணோடு மண்ணாகி அழிந்ததை உணர்ந்த அமரர், முனிவர், அந்தணர், முதலானோர் தம் துயர் தீர்ந்தது என்று பெரு மகிழ்ச்சியுடன் தலைமேல் கைகளை வைத்துத் தொழுதனர்.

***

விழுந்து புரள் - (இராமன் தேரேறினதால்) விழுந்து புரள்கிற; தீவினை - (உலகிலுள்ள) பாபங்கள்; நிலத்தொடு - (தாம் விழுந்த) பூமியோடு; வெதும்ப - வெந்து போக; தொழும் தகைய - யாவராலும் தொழப்படும் தகுதியுடைய; நல்வினை- புண்ணியங்கள்; களிப்பினொடு து ள் ள - மிகுந்த மகிழ்ச்சியோடு துள்ள; அழுந்து துயரத்து - தாம் ஆழ்ந்து போதற்குக் காரணமான துயரத்தை உடைய; அமரர் - தேவர்களும்; அந்தணர் - முனிவர்களும்; கை - தம் கைகள்: முந்து உற்று எழுந்து தலை ஏற - முன்னே நீட்டி மேலே எழுந்து தம் தம் தலைகளில் ஏறி; இராமன் இனிது ஏறினான் - இராமபிரான் (இந்திரன் அனுப்பிய தேரில்) இனிமையாக ஏறினான்.

***

இராமபிரான் தேரேறினமை இராவண சம்மாரத்தை உறுதி ஆக்கியதால் தீவினைகள் வெதும்பின; நல்வினைகள் துள்ளின; அமரரும் அந்தணரும் தம் கைகளைத் தம் உச்சியிற் கூப்பினர்.

இராமவதாரத்தின் நோக்கம் இங்குச் சுட்டிக்காட்டப்படுகிறது.

***


ஆழி அம் தடந் தேர், வீரன்
        ஏறலும், அலங்கல் சில்லி
பூழியில் சுரித் தன்மை
        நோக்கிய புலவர்போத,